தமிழகம் தொடர்ந்த வழக்கை சந்திக்க தயார்: சித்தராமையா
பெங்களூர்: காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதாக கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி நதியில், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கர்நாடகா மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில், ஏராளமான அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அப்படியே கலக்கப்படுகிறது.
இதனால், தமிழக பகுதிக்கு வரும் காவிரி ஆற்று நீர் மாசடைந்து உள்ளது. தமிழக மக்கள் மாசடைந்த காவிரி ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு "தமிழகம் கோர்ட்டை நாடினால், கர்நாடகாவும், நீதிமன்றம் வழியாகவே பதிலளிக்கும். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.
கர்நாடக அரசு பழிவாங்குவதற்காக சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாக அதிமுக தரப்பு புகார் கூறியுள்ளதாக நிருபர்கள் கேட்டதற்கு, பத்திரிகை செய்திகளில் அதுபற்றி பார்த்தேன். எனவே அதுபற்றி பதிலளிக்க விரும்பவில்லை என்று சித்தராமையா கூறினார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications