வெளிநாட்டு கார்கள் இறக்குமதி முறைகேடு- அலெக்ஸ் ஜோசப் கைது
டெல்லி: வெளிநாட்டு கார்கள் இறக்குமதி செய்ததில் வரிஏய்ப்பு செய்த புகாரில் அலெக்ஸ் ஜோசப் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் வேலை செய்து விட்டு தாயகம் திரும்பும் இந்தியர்கள் மூலம் கடந்த சில ஆண்டுகளில் 33 வெளிநாட்டு ஆடம்பரக் கார்கள் முறைகேடான வழிகளில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு.
இறக்குமதி செய்யப்படும் காருக்கான உரிய வரியை செலுத்துவதில் இருந்து தப்பிக்க பல முறைகேடுகளைச் செய்து அந்தக் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அலெக்ஸ் சி ஜோசப் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவரது முன் ஜாமீன் மனுவை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து 11 மாதத்துக்குப் பின்னர் சிபிஐ அதிகாரிகளால் அலெக்ஸ் சோசப் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரோல்ஸ் ராய்ஸ், ஹம்மர் உள்ளிட்ட 33 வெளிநாட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications