Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை ஆலை முறைகேடு வழக்கு.. சிபிஐ விசாரணை வளையத்தில் பஞ்சாப் முதல்வரின் மருமகன்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: சர்க்கரை ஆலை முறைகேடு தொடர்பாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், மருமகன் குர்பால் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருவது சிம்போலி சர்க்கரை ஆலை. நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை ஆலை இதுவாகும்.

CBI begins questioning Punjab CM’s son-in-law in Simbhaoli Sugars fraud case

இந்த ஆலை, சண்டிகரில் உள்ள ஓரியண்டல் வங்கி கிளையில் தொழில் வளர்ச்சிக்காக என்று கூறி, ரூ.109 கோடி அளவில் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்தவில்லை என்று சிபிஐயிடம் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சிம்போலி சர்க்கரை ஆலை குழுமத் தலைவர் குர்மித் சிங் மான், தலைமைச் செயல் அதிகாரி ராவ், தலைமை நிதி அலுவலர் சஞ்சய் தப்ரியா, செயல் இயக்குநர் குர்சிம் கவுர் மான் மற்றும் அந்நிறுவனத்தின் சில அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த பண மோசடியில் தொடர்பு இருப்பதாக பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கின் மருமகன் குர்பால் சிங் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

வங்கி மோசடி வழக்குகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் முதல்வரின் மருமகன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+