நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடா மனு தள்ளுபடி: சி.பி.ஐ கோர்ட்
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனுவை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 214 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டது என்பது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் புகார்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் புகார் எழுந்தது. அவரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீது எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதேபோல் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஜரான மதுகோடா, தங்களது பெயரை இணைத்த சி.பி.ஐ., சம்பந்தப்பட்ட ஊழல் நடைபெற்ற காலத்தில், பிரதமராகவும், நிலக்கரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த மன்மோகன்சிங் பெயரையும் கிரிமினல் குற்றவாளியாக இணைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று, இந்த வழக்கில் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப தேவையில்லை எனக் கூறி மதுகோடாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications