நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடா மனு தள்ளுபடி: சி.பி.ஐ கோர்ட்
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனுவை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 214 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டது என்பது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் புகார்.

இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் புகார் எழுந்தது. அவரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீது எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதேபோல் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஜரான மதுகோடா, தங்களது பெயரை இணைத்த சி.பி.ஐ., சம்பந்தப்பட்ட ஊழல் நடைபெற்ற காலத்தில், பிரதமராகவும், நிலக்கரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த மன்மோகன்சிங் பெயரையும் கிரிமினல் குற்றவாளியாக இணைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று, இந்த வழக்கில் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப தேவையில்லை எனக் கூறி மதுகோடாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications