நிர்வாண ஊர்வலம்.. மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை! சிபிஐ வழக்குப்பதிவு! அடுத்த அதிரடி இதுதான்!
இம்பால்: மணிப்பூரில் 2 குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இதுகுறித்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பிரிவில் உள்ளனர். இந்நிலையில் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக இருதரப்பு மக்களிடையே ஏற்பட்ட மோதல் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறையானது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில் பலாத்காரம், கடத்தல் உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறை குறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று சித்ரவதை செய்தது தொடர்பாக சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. அதன்படி மணிப்பூர் போலீசார் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.
முதற்கட்டமாக தற்போது மணிப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல் மற்றும் வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் கண்டு அடுத்தடுத்து மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிடும் சிபிஐ அதிகாரிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களிடமும் வாக்குமூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications