கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார், மீது சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக புகார் எழுந்து இருப்பதால், அவரை வெளிநாடுகளுக்கு செல்ல தப்பவிடக்கூடாது என அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சாராதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் கொல்கத்தா மாநகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார் சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக சிபிஐ குற்றம்சாட்டி அவருக்கு எதிரான விசாரணையை முடக்கிவிட்டது.

மம்தா போராட்டம்
இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாதங்களூக்கு முன்பு கொல்கத்தா நகரில் தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யதடை
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தன்னை சிபிஐ கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என ராஜீவ் குமார் கோரியிருந்தார. இதன்படி மே24ம் தேதி வரை உச்சநீதிமன்றம் ராஜீவ் குமாரை கைது செய்ய தடை விதித்து இருந்தது.

கைதாக வாய்ப்பு
ஆனால் அதற்கு பிறகு மீண்டும் மேல்முறையீடு செய்த போது, ராஜீவ் குமாரின் கோரிக்கை ஏற்க மறுத்து, அவருக்கு முன்ஜாமின் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதனால் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கமிஷ்னுக்கு நோட்டீஸ்
சிபிஐ அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ராஜீவ்குமாருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்துள்ளது. இதன்படி இந்தியாவின் எந்த விமான நிலையங்கள் வழியாகவும் ராஜீவ்குமார் வெளிநாடு சென்று தப்பிக்க விடக்கூடாது என் சிபிஐ விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளது. இதனால் ராஜீவ் குமார் மீது சிபிஐயின் பிடி இறுகி உள்ளது. இது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications