என்னது டெல்லி சி.எம். ஆபீஸை சீல் வெச்சிட்டாங்களா.. 'ஷாக்' ஆன மமதா
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலத்தை சீல் வைத்துவிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தியதாக வெளியான செய்தி தம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகம், தலைமை செயலகம் ஆகியவற்றில் இன்று திடீரென சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மீதான பழைய ஊழல் வழக்கு மீதான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் ஒரு மாநில தலைமை செயலகத்தில், மாநில முதல்வரின் அலுவலகத்தில் வரலாறு காணாத வகையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது மத்திய அரசின் மிரட்டல்போக்குதான் என்றே குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முதல்வர் அலுவலகத்தை சீல் வைப்பது என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்று...இது என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது என பதிவிட்டுள்ளார்.
Mamata Di. This is undeclared emergency https://t.co/l1EQOTfrFy
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 15, 2015 இதற்கு பதிலளித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், இது ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என சாடியுள்ளார்.
மேலும் இந்தியாவிலேயே ஊழல் செய்த காரணத்தாக அமைச்சர் மற்றும் அதிகாரியை டிஸ்மிஸ் செய்த ஒரே முதல்வர் நான் தான்.. அந்த வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கிறேன்.. அப்படியான நிலையில் ராஜேந்திரகுமார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை என்னிடம் கொடுங்கள் நானே அவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications