கேஜ்ரிவால் செயலாளர் ராஜேந்திரகுமார் வீட்டில் ரொக்கம், ஆவணங்கள் சிக்கின... எந்நேரத்திலும் கைது?
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் முன்னாள் தனிச்செயலரும் டெல்லி அரசின் தற்போதைய முதன்மை செயலாளருமான ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகாரைத் தொடர்ந்து அவரது வீடு உட்பட மொத்தம் 14 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து ரூ2.4 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கிய நிலையில் அவர் எந்த நேரத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

டெல்லி அரசில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருபவர் ராஜேந்திர குமார். டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் தனிச்செயலராக இருந்தவர். கடந்த மே மாதம் இவரை முதன்மைச் செயலராக்கினார் முதல்வர் கேஜ்ரிவால்.
ஆனால் ராஜேந்திரகுமார் மீது கிரிமினல், ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரது நியமனத்தை ஆளுநரும் மத்திய அரசும் ஏற்க முடியாது என நிராகரித்திருந்தன. ராஜேந்திரகுமார் இடத்துக்கு மற்றொரு அதிகாரியை மத்திய அரசு தானே நியமித்தது.
இந்த குழப்பங்களுக்கு இடையே ராஜேந்திரகுமார் மீதான ஊழல் வழக்கை கையிலெடுத்த சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று டெல்லி தலைமைச் செயலகம், ராஜேந்திர குமார் வீடு உட்பட 14 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ராஜேந்திரகுமார் வீட்டில் இருந்து ரூ2.4 லட்சம் ரொக்கமும் ஏராளமான ஆவணங்களும் சிக்கின. மேலும் ரூ3 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கின.
இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இச் சோதனையின் முடிவில் ராஜேந்திரகுமாரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்வார்கள் என தெரிகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications