அன்னிய செலாவணி முறைகேடு... என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ ரெய்டு
அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய்க்கு சொந்தமான 4 இடங்களில் சிபிஐ ரெய்டு இன்று நடத்தப்பட்டது.
டெல்லி: அன்னிய செலாவணி விதிகளை மீறி என்டிடிவி நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அதன் துணை நிறுவனரும், நிர்வாக துணை தலைவருமான பிரணாய் ராய் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இந்தியாவில் உள்ள வங்கியில் ரூ.48 கோடி கடன்பெற்று அதை வெளிநாடுகளில் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.

இதனால் ரூ.2,030 கோடி அன்னிய செலாவணி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய அமலாக்கத் துறை அந்த தொகையை உடனே செலுத்துமாறு பிரணாய் ராய்க்கு கடந்த 2015-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும், பொய்யானவை என்றும் ரூ.2030 கோடி செலுத்துமாறு அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் என்டிடிவி கோரிக்கை விடுத்தது. எனினும் என்டிடிவியின் கோரிக்கையை இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.
இதைத் தொடர்ந்து பிரணாய் ராய்க்கு சொந்தமான டெல்லி, டெராடூன் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ சோதனை இன்று நடைபெற்றது.
என்டிடிவி நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து என்டிடிவி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ என்டிடிவி நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. எதிரிகளின் சதி திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.
ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நிறுவனத்தை அழிக்க நினைப்போருக்கு நாங்கள் ஒரு விஷயத்தை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நாட்டு நலனுக்காக கடுமையாக நாங்கள் போராடி இதுபோன்ற தீயசக்திகள் கொடுக்கும் குடைச்சல்களில் இருந்து மீளுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications