Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உர ஊழல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: உர ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

2007-ம் ஆண்டு முதல் 2009-ல் ஆண்டு வரை மானிய விலையில் உரத்தை ஏற்றுமதி செய்து ஊழலில் ஈடுபட்டார் என அக்ரசென் கெலாட் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கதுறை ஏற்கனவே வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தி இருந்தது.

CBI Raids Rajasathan CM Ashok Gehlots Brother House

இந்நிலையில் இன்று அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அக்ரசென் கெலாட் மீதான உர ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ புதிய வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. இதனடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அசோக் கெலாட்டும் பங்கேற்றார்.

இந்த பின்னணியில் அசோக் கெலாட்டின் சகோதரர் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் சிக்கி இருக்கிறார். ஆகையால் இது அரசியல் பழிவாங்கல் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+