கர்நாடகா அதிகாரி டி.கே.ரவி மரணம் குறித்து விசாரிக்க வருகிறது 'ஒன்லி' சென்னை சி.பி.ஐ. டீம்!
பெங்களூர்/சென்னை: கர்நாடகா ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி மரணம் குறித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறமாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தின் பின்னணியில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இருக்க கூடும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனால் ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ பிடிவாதமாக சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று கூறிவந்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.
இதனைத் தொடர்ந்து வேறுவழியின்று கர்நாடகா சட்டசபையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக சித்தராமையா அறிவித்தார்.
தற்போது இந்த வழக்கை சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளே விசாரிக்க இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன் இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணைக் குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறவும் மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கர்நாடகா சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் இதுவரை விசாரித்து பெறப்பட்ட தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுப் பெற உள்ளனர். அதன் பின்னர் ரவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போஸ்ட்மார்டம் அறிக்கையை ஆராய்கின்றனர். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ரவியின் உடல் தோண்டி எடுக்க வாய்ப்பிருக்கிறது. ரவியின் உடலின் விஷ ஊசி போட்டுவிடப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற தகவலும் இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த கோணத்திலும் ஆராய்வர்.
மேலும் ரவியின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் மெசேஜ்கள், எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. டீம் ஆராயும். மொத்தம் 272 மெசேஜ்கள் அவரது செல்போனில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அரசியல்வாதிகள்- ரவி இடையெயான மோதல்கள் பற்றியும் சென்னை சி.பி.ஐ. டீம் ஆராய உள்ளது. பின்னர் ரவியின் நண்பர்கள், குடும்பத்தினரையும் விசாரிக்க இருக்கும் சி.பி.ஐ, ரவியின் அப்பார்ட்மென்ட்டின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளும் ஆராயப்பட இருக்கிறது. ரவியின் மரணம் குறித்த சென்னை சி.பி.ஐ.டீம் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications