கர்நாடகா அதிகாரி டி.கே.ரவி மரணம் குறித்து விசாரிக்க வருகிறது 'ஒன்லி' சென்னை சி.பி.ஐ. டீம்!
பெங்களூர்/சென்னை: கர்நாடகா ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி மரணம் குறித்து சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறமாட்டார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கர்நாடக வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி கடந்த 16-ந் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தின் பின்னணியில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் இருக்க கூடும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனால் ரவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ பிடிவாதமாக சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று கூறிவந்தார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.
இதனைத் தொடர்ந்து வேறுவழியின்று கர்நாடகா சட்டசபையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதாக சித்தராமையா அறிவித்தார்.
தற்போது இந்த வழக்கை சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளே விசாரிக்க இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒன் இந்தியாவுக்குத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விசாரணைக் குழுவில் கர்நாடகாவைச் சேர்ந்த எந்த ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் இடம்பெறவும் மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கர்நாடகா சி.ஐ.டி. போலீசார் இவ்வழக்கில் இதுவரை விசாரித்து பெறப்பட்ட தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுப் பெற உள்ளனர். அதன் பின்னர் ரவியின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போஸ்ட்மார்டம் அறிக்கையை ஆராய்கின்றனர். அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ரவியின் உடல் தோண்டி எடுக்க வாய்ப்பிருக்கிறது. ரவியின் உடலின் விஷ ஊசி போட்டுவிடப்பட்டு பின்னர் தூக்கில் தொங்கவிடப்பட்டார் என்ற தகவலும் இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த கோணத்திலும் ஆராய்வர்.
மேலும் ரவியின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ் அப் மெசேஜ்கள், எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ. டீம் ஆராயும். மொத்தம் 272 மெசேஜ்கள் அவரது செல்போனில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் அரசியல்வாதிகள்- ரவி இடையெயான மோதல்கள் பற்றியும் சென்னை சி.பி.ஐ. டீம் ஆராய உள்ளது. பின்னர் ரவியின் நண்பர்கள், குடும்பத்தினரையும் விசாரிக்க இருக்கும் சி.பி.ஐ, ரவியின் அப்பார்ட்மென்ட்டின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளும் ஆராயப்பட இருக்கிறது. ரவியின் மரணம் குறித்த சென்னை சி.பி.ஐ.டீம் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications