சாரதா நிதி நிறுவன மோசடி: மமதாவை சி.பி.ஐ. விசாரிக்க பா.ஜ.க. வலியுறுத்தல்!
கொல்கத்தா: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமாம மமதா பானர்ஜியையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம், முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்த வழக்கு பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடையதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு எம்.பி.க்கள், மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் ராயிடம் சி.பி.ஐ. நேற்று 5 மணிநேர விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்தா சென், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முகுல் ராய் ஆகியோர் டார்ஜிலிங் மாவட்டம், டெலோவில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதனை முகுல் ராய் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். தற்போது, முகுல் ராயை அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
இதே சட்டம் மமதாவிற்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.க்கு இரு வேறு அளவுகோல் இருக்க முடியாது. எனவே, மமதாவிடம் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு சித்தார்நாத் சிங் கூறினார்.
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications