Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர்: வன்முறைகள் திட்டமிட்ட சதியா? என விசாரிக்கும் சிபிஐ! பாஜக எம்எல்ஏ வீட்டில் குண்டு வீச்சு!

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகள் திட்டமிட்ட சதியா என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இதனிடையே மணிப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் குக்கி இன மக்கள். இதனால் இரு இனங்களுக்கு இடையேயான மோதல் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. கடந்த ஒரு மாத காலமாக 100க்கும் மேற்பட்டோர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். 30,000க்கும் அதிகமானவர்கள் சொந்த இடங்களைவிட்டு அதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

CBI to probe Manipur Violence was pre-planned?

மேலும் மணிப்பூர் மாநிலத்தில் 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 500க்கும் அதிகமான பிஎஸ்எப் படை வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதற்கு குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குக்கி இனக்குழுவில் ஆயுதம் ஏந்தியவர்கள் பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முகாமிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் வன்முறைகள் ஓயவில்லை. இந்த நிலையில் மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் திட்டமிட்ட சதியா? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+