மத்திய அரசு பதிலடி.. மேற்கு வங்கத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு.. உச்ச கட்ட பரபரப்பு!
கொல்கத்தா போலீசுக்கு எதிராக தற்போது மேற்கு வங்கத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொல்கத்தா: கொல்கத்தா போலீசுக்கு எதிராக தற்போது மேற்கு வங்கத்தில் மத்திய ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
கொல்கத்தாவில் சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மாநில போலீஸ் அவர்களை கைது செய்து இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மமதாவின் உத்தரவின்படி கொல்கத்தா போலீஸ் கைது நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.

இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது.
உச்சகட்ட திருப்பமாக தற்போது கொல்கத்தா போலீஸ், மேற்கு வங்கத்தில் இருக்கும் அனைத்து சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முயன்று வருவதாக செய்திகள் வருகிறது. மேற்கு வங்க மாநில சிபிஐ இயக்குனர் மற்றும் சிபிஐ துணை இயக்குனர் இருவரையும் தற்போது போலீஸ் கைது செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் தற்போது மத்திய அரசு களத்தில் இறங்கி உள்ளது. சிபிஐ அதிகாரிகளை பாதுகாக்கும் விதத்தில் மத்திய அரசு அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை களமிறக்கி இருக்கிறது.
கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகம் முன் சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு அலுவலகங்கள் முன்னும் ரிசர்வ் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள் .
சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸ் கைது செய்வதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது சிபிஐ vs போலீஸ் பிரச்சனை, மத்திய அரசு vs மாநில அரசு பிரச்சனையாக மாறியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications