சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு!
சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கருணை மதிப்பெண் வழங்கவும் சிபிஎஸ்இ பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக சிபிஎஸ்இ உட்பட 32 கல்வி வாரியங்கள் அறிவித்தன.
இதனை எதிர்த்த டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் சிபிஎஸ்இயின் முடிவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிபிஎஸ்இக்கு கண்டனம்
மாணவர்கள் தேர்வு எழுவதற்கு முன்பு கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு, இப்போது வழங்க முடியாது என சிபிஎஸ்இ அறிவித்தது நியாயமற்றது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நிறுத்தப்பட்ட தேர்வு முடிவு
இதையடுத்து நேற்று முன்தினம் வெளியாவதாக இருந்த சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது.

மதித்து செயல்பட முடிவு
அப்போது உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியங்கள் டெல்லி உயர்நீதிமன்றத் உத்தரவை மதித்து செயல்பட சிபிஎஸ்இ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருணை மதிப்பெண் வழங்க திட்டம்
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் திட்டத்தை கைவிட சிபிஎஸ்இ பள்ளிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ கல்வி வாரியம் திட்டமிட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது.

நாளை மறுநாளுக்குள் முடிவு
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் இந்த முடிவால் நாளை மாலைக்குள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது. இல்லை எனில் ஞாயிற்றுக்கிழமைக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications