சிபிஎஸ்இ 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியாகிறது.. இந்த இணையதளங்களில் காணலாம்
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை காலை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ.அறிவித்து உள்ளது.
டெல்லி: சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.result.nic.in, ஆகிய இணையதளங்களில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற்றன. இத்தேர்வை 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவை www.cbse.nic.in, results.nic.in, மற்றும் www.cbseresults.nic.in, ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பத்து மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.