அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை: கேரளா அரசு கிடுக்குபிடி
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின் போது ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரளாவில் பெரும்பான்மையான அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பணிநேரத்தின் போது பல மணி நேரம் செல்போன்களை பயன்படுத்துவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. பல ஊழியர்கள் பணிநேரத்தில் தங்களது பணிகளை மறந்து செல்போனில் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதளங்களில் மூழ்கி விடுகின்றனர். இதனால் பல்வேறு முக்கிய தேவைகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு அலுவலகங்களில் பணிநேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த கேரள அரசு தடை விதித்தது. ஆனால் இந்த உத்தரவால் எந்த பலனும் ஏற்படவில்லை. பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் வழக்கம்போல செல்போன்களை பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக தொழில் துறை விஜிலென்ஸ் அமைப்பிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சமீபத்தில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், ‘'அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அந்தந்த துறை தலைவர்கள் இதை கண்காணித்து தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களிலுள்ள கம்ப்யூட்டர்களிலும் ஊழியர்கள் சமூக இணையதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications