For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது- வீடியோ

    டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

    Central govt is ready to set up Cauvery Management board: UB Singh

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வாரியம், அல்லது ஆணையம் அல்லது குழு அமைக்க தயார் என நீர்வளத்துறை செயலர் யுபி சிங் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த தயார் என்றும் யுபி சிங் தெரிவித்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநில அரசுகள், வரைவு திட்டம் குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    English summary
    Central govt is ready to set up Cauvery Management board said Ministry of Water Resources Secretary UB Singh in Supreme court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X