டெல்லி காங். தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு!
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை அக்டோபருக்குள் காலி செய்ய கெடு விதித்து மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி அக்பர் சாலையில் 24-ம் எண் பங்களாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 1978-ம் ஆண்டு முதல் இந்த முகவரியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது.

உரிமங்களை மீண்டும் புதுப்பித்தலின் அடிப்படையில் தொடர்ந்து வாடகை செலுத்க்தி இந்த இடத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வந்தது. 2010-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் கட்டுவதற்கு ரவுஸ் அவென்யூ பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனால் அக்பர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி காலி செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ரவுஸ் அவென்யூ பகுதியில் கட்டுமானத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறி காலி செய்ய கால நீட்டிப்பு கேட்டது காங்கிரஸ்.
இந்நிலையில் வரும் அக்டோபருக்குள் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல் 26, அக்பர் சாலையில் இயங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் அலுவலகம், 5, ரெய்சினா சாலையில் இயங்கும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகம், சாணக்யபுரி குடியிருப்பு ஆகியவற்றையும் காங்கிரஸ் கட்சி காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications