டெல்லி ஆளுநருக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றறிக்கை- கேஜ்ரிவால் கொந்தளிப்பு!!
டெல்லி: டெல்லி ஆளுநர் நஜீப்ஜங்குக்கு அதிக அதிகாரம் உண்டு என்று உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதற்கு முதல்வர் கேஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் செய்வதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கே அதிகாரம் என்றும், முதல்வரின் கருத்தை துணை நிலை ஆளுநர் அறிய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
BJP first lost Del elections. Today's notification shows BJP's nervousness abt our anti-corruption efforts. BJP again lost today
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 22, 2015 இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முதலில் டெல்லி தேர்தலில் தோற்ற பாஜக தற்போது அறிவிக்கை மூலம் மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.
ஊழலுக்கு எதிரான டெல்லி அரசின் நடவடிக்கையை பார்த்து பாஜக அரசு பயப்படுகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications