மத்திய அரசு குறி வைக்கும் "9 தூண்கள்"!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசும்போது, இந்தியாவின் பெருமைக்குரிய 9 தூண்கள் என்று குறிப்பிட்டு 9 துறைகள் குறித்து விவரித்தார். இதை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படும் என்றும் அவர் கூறினார்.
ஜேட்லி பேச்சின்போது கூறுகையில், அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசின் நோக்கமானது, இந்தியாவின் பெருமைக்குரிய 9 தூண்களை வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதே.

விவசாயம், ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சி, கல்வி -வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்பு முதலீடுகள், நிதித்துறை சீரமைப்பு, நிர்வாகம் - வர்த்தகம், நிதி ஒழுங்கு, வரி சீரமைப்பு ஆகியவையே அந்த 9 தூண்கள்.
விவசாயத்துறையில் நாங்கள் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம் என்று கூறினார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications