"காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்"- கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்யசபாவில் தீர்மானம்!!
டெல்லி: மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்; அவரது கருத்துகள் முட்டாள்தனமானவை என மிகக் கடுமையாக விமர்சித்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவுக்கு நாடாளுமன்றம் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்ஜூவுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அவரை நீதிபதியாக நியமிக்க தமிழக அரசியல் கட்சி ஒன்று மத்திய அரசை வற்புறுத்தியது எனக் கூறினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும் பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியைவிட சாஷியா இல்மி அழகானவர். அவரை நிறுத்தியிருந்தால் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.
இந்நிலையில், மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என கூறி புதிய சர்ச்சையை உருவாக்கினார். தமது இணைய தள பக்கத்தில், இப் பதிவு எனக்கு பெரிய தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்.
அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் புகழ் தேடுபவனும் அல்ல. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் எனக்கு பல கண்டனங்களும் வருகிறது. இருப்பினும் நாட்டின் நலன் கருதியே நான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.
மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜண்டாக இருந்தார். மதத்தையும் அரசியலில் புகுத்தி இந்தியாவுக்கு மிகபெரிய தீங்கை செய்து உள்ளார். மேலும், பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர் ஆதரித்தார்.
மகாத்மா காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிரானவர். இந்த முட்டாள்தனத்தால் கை நூற்பு இராட்டையை அவர் போதித்தார். இதுபோல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது.
இது மக்களை ஏமாற்றும் செயல் என மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் காந்தி யங் இந்தியா, ஹரிஜன் ஏடுகளில் எழுதியதை மேற்கோள்காட்டி இந்த நாட்டின் தந்தையாக போற்றப்படுகிறவரின் முட்டாள்தனமான கருத்துகளைப் பாருங்கள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார் கட்ஜூ.
இது இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் கட்ஜுவை கண்டித்து ஒரு மனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் காந்திஜிக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் எதிராக கட்ஜு கூறியுள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கட்ஜூவின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications