Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்"- கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்யசபாவில் தீர்மானம்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏஜெண்ட்; அவரது கருத்துகள் முட்டாள்தனமானவை என மிகக் கடுமையாக விமர்சித்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூவுக்கு நாடாளுமன்றம் மிகக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கட்ஜூவுக்கு எதிராக ராஜ்யசபாவில் கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. அவரை நீதிபதியாக நியமிக்க தமிழக அரசியல் கட்சி ஒன்று மத்திய அரசை வற்புறுத்தியது எனக் கூறினார்.

Centre condemns Katju on remarks against Gandhi

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் எனவும் பா.ஜ.க. டெல்லி முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியைவிட சாஷியா இல்மி அழகானவர். அவரை நிறுத்தியிருந்தால் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கும் என்பது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில், மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என கூறி புதிய சர்ச்சையை உருவாக்கினார். தமது இணைய தள பக்கத்தில், இப் பதிவு எனக்கு பெரிய தொல்லைகளையும், எதிர்ப்புகளையும் கொடுக்கும் என்பது எனக்குத் தெரியும்.

அது ஒரு பெரிய விஷயமே இல்லை. நான் புகழ் தேடுபவனும் அல்ல. இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் எனக்கு பல கண்டனங்களும் வருகிறது. இருப்பினும் நாட்டின் நலன் கருதியே நான் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறேன்.

மகாத்மா காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜண்டாக இருந்தார். மதத்தையும் அரசியலில் புகுத்தி இந்தியாவுக்கு மிகபெரிய தீங்கை செய்து உள்ளார். மேலும், பிரிட்டிஷின் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர் ஆதரித்தார்.

மகாத்மா காந்தி தொழில் மயமாக்கலுக்கு எதிரானவர். இந்த முட்டாள்தனத்தால் கை நூற்பு இராட்டையை அவர் போதித்தார். இதுபோல் அவர் உபதேசித்த கோட்பாடுகள் அனைத்தும் முட்டாள்தனமானது.

இது மக்களை ஏமாற்றும் செயல் என மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் காந்தி யங் இந்தியா, ஹரிஜன் ஏடுகளில் எழுதியதை மேற்கோள்காட்டி இந்த நாட்டின் தந்தையாக போற்றப்படுகிறவரின் முட்டாள்தனமான கருத்துகளைப் பாருங்கள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார் கட்ஜூ.

இது இன்றைய நாடாளுமன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் கட்ஜுவை கண்டித்து ஒரு மனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் காந்திஜிக்கும், சுபாஷ் சந்திரபோசுக்கும் எதிராக கட்ஜு கூறியுள்ள கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கட்ஜூவின் கருத்து கடும் கண்டனத்துக்குரியது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+