காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பரிசீலனை: நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கூறினார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரு மாநில நலன்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்காது என்றும் உமாபாரதி கூறினார்.
கங்கையை தூய்மைப்படுத்த மிகப்பெரிய அளவில் திட்டம் தயாராகி வருகிறது என்று தெரிவித்த உமாபாரதி, கங்கையை போல் பிற நதிகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications