For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டுப் 'பொறி'க்கு ஓகே .மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி - அமைச்சரவை ஒப்புதல்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலையில் அறிவிக்கப்படும். ஆனால் நடப்பாண்டு ஜூலையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர். இந்த அகவிலைப்படியின் பலன் ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்

இந்த ஊதிய உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 10,879 கோடி செலவாகும். கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 1-இல் அகவிலைப்படி 10% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, அகவிலைப்படி தற்போதுதான் இரட்டை இலக்கத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

English summary
Centre hikes dearness allowance of its employees by 10 per cent to 90 per cent of basic pay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X