காவிரி பேச்சுவார்த்தையில் பலன் கிடைக்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
டெல்லி: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உமா பாரதி முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இரு மாநில பிரதிநிதி களின் கூட்டத்திலும் கர்நாடகா இதே கருத்தில் பிடிவாதமாக இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது என்பதால், அதில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு சமர்ப்பித்தது. இதையடுத்து உமா பாரதியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
தமிழகம், கர்நாடகா இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படவில்லை என மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications