தலித் என்ற வார்த்தையை ஆவணங்களில் பயன்படுத்த கூடாது.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
தலித் என்ற வார்த்தையை எந்த அரசு ஆவணங்களிலும் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
டெல்லி: தலித் என்ற வார்த்தையை எந்த அரசு ஆவணங்களிலும் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தற்போது இந்தியா முழுக்க தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட மாற்றத்திற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.
இதில் பெரிய கலவரமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கலவரம் காரணமாக 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

என்ன சட்டம்
கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இதுஇயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது.

உத்தரவு
இந்த நிலையில் இந்த தீர்ப்பு வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு மார்ச் 15ம் தேதி மத்திய அரசு மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி இருக்கிறது. அதில் இனி அரசு ஆவணங்கள் எதிலும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்படி பயன்படுத்தினால் அந்த சுற்றறிக்கையை எடுத்துக் கொள்ள முடியாது என்றுள்ளனர்.

என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும்
இந்த தலித் என்ற வார்த்தைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. அதேபோல் ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற என்ற வார்த்தைக்கு பதில் எஸ்.டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் ஒன்றில் இருந்து இதை கடைபிடிக்க கூறியுள்ளனர்.

காரணம்
இதற்கு மத்திய அரசு அந்த உத்தரவு கடிதத்திலேயே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தலித் என்ற வார்த்தை யாரை குறிப்பிட பயன்படுத்தலாம் என்று இந்திய சட்ட புத்தகத்தில் விளக்கம் இல்லை, தலித் என்பதை ஜாதி பெயர் என்றுதான் கொள்ள முடியுமே தவிர, பல ஜாதிகள் கொண்ட பிரிவு மக்களை குறிப்பிட பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. இதனால் எஸ்.சி, எஸ்.டி என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தும்படி கூறியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications