14வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ1,510 கோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 14வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ1,510 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு 2015-16ஆம் நிதி ஆண்டுக்காக முதல் தவனையாக ரூ37,420 கோடி வழங்க 14வது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி மாநிலங்களுக்கான முதல் தவணை ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்று அறிவித்தது.

இதில் தமிழகத்துக்கு ரூ1,510 கோடி, ஆந்திராவுக்கு ரூ1,616.78 கோடி, கர்நாடகாவுக்கு ரூ 1,770.46 கோடி, கேரளாவுக்கு ரூ937.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்துக்கு ரூ6,735 கோடி, பீகாருக்கு ரூ3,624 கோடி; மத்திய பிரதேசத்துக்கு ரூ2835.75 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ2,746.91 கோடி; மகாராஷ்டிராவுக்கு ரூ2,075. 59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications