Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபத்தின் பிடியில் அமர்நாத் – தீவிரவாதத் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமர்நாத் புனிதத் தலத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறுகையில், உளவுத்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அமர்நாத் புனித தலத்திற்கு வரும் யாத்ரீகர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்தில் தீவிரவாதிகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Centre warns of terror attack on Amarnath pilgrims, alerts J&K govt

இதுதொடர்பாக மாநில அரசு எச்சரிக்கப்பட்டுள்ளது. உஷார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த வருட யாத்திரையின் தொடக்கத்தில் சில வாகனங்களின் மேல் கற்கள் வந்து விழுந்த சம்பவமும் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் ஒரு யாத்ரீகர் காயமடைந்துள்ளார். எனவே அவர்களுக்கான சரியான பாதுகாப்பு வசதிகளும் தேவை என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் அரசானது முழுவதுமான அமர்நாத் யாத்திரைக்கான வழியினை "பாதிப்புக்குள்ளாகும் பகுதி" என்று அறிவித்துள்ளது.

ஜூன் 28ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. அதற்கு ராணுவம் முழு அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+