நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக நிலை என்ன? சொல்கிறார் தம்பித்துரை
காவிரி விவகாரத்தில் தமிழக நலனுக்காக போராடுகிறோம், தொடர்ந்து போராடுவோம் என லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என லோக்சபா துணை தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் கடந்த ஒருவார காலமாக போரடி வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பித்துரை, லோக்சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும்போது, யாருக்கு ஆதரவு என்பதை அதிமுக முடிவு செய்யும் என்றார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரப்போவதாக ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். இது போல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தெலுங்கு தேசம் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சிக்கு லோக்சபாவில் 16 எம்.பிக்களும் ராஜ்யசபாவில் 6 எம்.பிக்களும் உள்ளனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஏமாற்றுவதுதான் பாஜக என தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்கள் விமர்சனம் செய்து உள்ளனர். வரும் திங்களன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளனர்.

ஸ்டாலின் பேட்டி
இதனிடையே அதிமுக எம்பிக்களுக்கு சூடு சொரணை இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக செயல்தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

ஆதரவு கொடுக்குமா?
நமது தமிழக நலனுக்காக யார் குரல் கொடுத்தார்களோ அவர்களுக்கு மட்டுமே நாம் குரல் கொடுப்போம் ஆதரவு தருவோம். தெலுங்கு தேச கட்சி வேறு பிரச்சினைக்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை வேறு வேறு
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக போராடி வருகிறது. சிறப்பு அந்தஸ்து கோரியே தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போராடுகிறது, இரண்டிற்குமான வித்தியாசம் வேறு என கூறினார்.

அதிமுக ஆதரவு
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனியப்பன் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாவிட்டால் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீா்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று தொிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications