தமிழக சட்டசபை தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்குமாம்... நாராயணசாமி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக சட்டசபையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்கும்.

இந்த தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நிச்சயம் கவனத்தில் கொள்வார். கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications