டெல்லியில் சீனா அதிபர் ஜின்பிங்- ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு!
டெல்லி: இந்தியா வருகை தந்துள்ள சீனா அதிபர் ஜீ ஜின்பிங்குக்கு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று பாரம்பரிய வரவேற்பளிக்கப்பட்டது.
சீனா அதிபர் ஜீ ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வருகை தந்தார். குஜராத்தின் அகமதாபாத் நகரில் வந்திறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, சீனா அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் முன்னிலையில் குஜராத் - சீனா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிறகு மோடி அளித்த விருந்தில் பங்கேற்ற சீனா அதிபர், தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். டெல்லி சென்ற அவர் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.
முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் ஜின்பிங்குக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை சீனா அதிபர் ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜின்பிங், இந்தியாவும் சீனாவும் நீண்டகால நட்பு நாடுகள். என்னுடைய இந்த முதல் பயணத்தின் மூலம் இருநாட்டு உறவும் பலப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை ஜின்பிங் சந்தித்துப் பேசுகிறார். அதன் பின்னர் இந்தியாவும் சீனாவும் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளும்,