Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நாட்களாக நீடிக்கும் மீட்பு பணி.. பிரச்னை இதுதானா? உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நீடித்து வரும் நிலையில், மீட்பு பணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.

Challenges in rescuing workers trapped in Uttarkashi mine in Uttarakhand

கடந்த 10 நாட்களாக இவர்களை மீட்க தொடர் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மேற்கொண்டிருக்கின்றனர். தொடர் முயற்சி காரணமாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் உணவு பொருட்களை விநியோகிக்க முடிந்திருக்கிறது. இது உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் உள்ளே சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என சக தொழிலாளர்களும், உறவினர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

இப்படி இருக்கையில் தற்போது சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. "நாங்கள் இங்கு சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டதால் நிலைமை மோசமாகிவிட்டது. எனவே எங்களை உடனடியாக மீட்க வேண்டும்" என வீடியோவில் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதேபோல ஏன் 10 நாட்கள் ஆகியும் சுரங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, இதுவரை சுரங்கத்தின் வாயிற் பகுதியில் நுழைந்து தொழிலாளர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. காரணம் அங்கிருக்கும் பாறைகளின் தன்மைதான். மற்ற மலை பகுதியில் இருக்கும் பாறைகளை போல உத்தரகாண்ட் மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மலையின் பாறைகள் கடினமானவை கிடையாது. இந்த பாறைகளை கையில் எடுத்தாலே உதிரியாய் பெயர்ந்து வரும் அளவுக்கு மென்மையாக இருக்கிறது.

எனவே நுழைவு வாயில் வழியாக உள்ள இடிபாடுகளை அகற்றும்போது மேலும் மண், பாறை சரிவுகள் ஏற்படுகின்றன. இதை பொருட்படுத்தாமல் மேலும் மேலும் தோண்ட தொடங்கினால் சுரங்கம் முழுமையாக இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்த துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க போராடி வருகின்றனர். இந்த முயற்சியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் மிகுந்த கவனத்துடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதான் மீட்பு பணிகள் தாமதமாக காரணமாக சொல்லப்படுகிறது.

அதேபோல இவ்வளவு மென்மையாக இருக்கும் மலைகளில் ஏன் சுரங்கம் போன்ற கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? என இயற்கை ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+