ஆந்திர அரசு குறித்து அமித்ஷா கடிதம் முழுக்க தவறான தகவல்கள்: சந்திரபாபு நாயுடு
ஆந்திர அரசு குறித்து அமித்ஷா எழுதிய கடிதத்தில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
Recommended Video

அமராவதி: ஆந்திர அரசுக்கு நிதி அளித்தோம் என்று அமித்ஷா கூறுவது தவறான தகவல் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியதை தொடர்ந்து அது துரதிருஷ்டவசமானது என்று கூறி தேசிய தலைவர் அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஆந்திர அரசுக்கு மத்திய அரசு ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறியது அரசியலுக்காகவே ஒழிய ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சந்திர பாபு நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் எங்களுக்கு நிதியுதவி அளித்தும் அதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று அமித்ஷா கூறுவதை பார்த்தால் ஏதோ எங்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று பாஜகவினர் சொல்ல வருகின்றனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேளாண்மையில் சிறந்து விளங்கியுள்ளோம். இதற்காகந எங்களுக்கு தேசிய அளவில் விருதுகள் கிடைத்துள்ளன. இதுதான் எங்கள் திறமை. ஏன் பொய்யான தகவல்களை அவிழ்ந்து விடுகிறீர்கள். கடிதம் முழுவதுமே பொய்யான தகவல்களையே அமித்ஷா கொடுத்துள்ளார் என்றார் சந்திரபாபு நாயுடு.












Click it and Unblock the Notifications