தெலுங்கானா விவகாரம்: ஜனாதிபதி, ராஜ்நாத் சிங்கை சந்தித்த சந்திரபாபு நாயுடு
டெல்லி: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் பிரணாபிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கிரஸ் மிகவும் முக்கியமான விஷயத்தை அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறது. பிரமதர் மன்மோகன் சிங்கோ ஆந்திர விவகாரத்தை ஏதோ காங்கிரஸ் கட்சியின் விவகாரம் போன்று பார்த்து அதற்கு ஒரு தீர்வு காணத் தவறிவிட்டார்.

போராட்டம் நடத்தி வரும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணுமாறு வேண்டி நான் பிரதமருக்கு கடந்த மாதம் 9 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய அரசு தெலுங்கானா பிரச்சனைக்கு தீர்வு காண இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
தெலுங்கான விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நாயுடு பிரணாபை கேட்டுக் கொண்டார். ஆந்திராவில் கடந்த 4 ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ளது. ஆனால் காங்கிரஸோ சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பிரச்சனையை தனது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்று நாயுடு தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு

சந்திரபாபு நாயுடு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் வைத்து நேற்று சந்தித்து சுமார் 1 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று நாயுடு தெரிவித்தார். தெலுங்கானா பிரச்சனை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியதாக நாயுடு மேலும் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications