2000 ரூபாய்க்கு எங்கு போய் சில்லரை மாற்றுவது.. ரூ. 200 நோட்டை அச்சிடலாம் - சந்திரபாபு யோசனை

மக்களுக்கு ரூ. 2000 நோட்டால் பயன் இருக்காது. மாறாக ரூ. 200 நோட்டை அச்சிட்டு வெளியிடலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சாதாரண மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டு என்பது எந்த பயனையும் தராது. சில்லரை மாற்றுவதில் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படும். அதற்குப் பதில் 200 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விடலாம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு முதலில் வரவேற்பு தெரிவித்தவர்களில் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். குறிப்பாக 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கூறி வந்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் தற்போது மத்திய அரசின் குழப்பமான செயல்பாடுகளால் சந்திரபாபு நாயுடுவும் கூட அதிருப்தி அடைந்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள 2000 ரூபாய் நோட்டால் எந்த பயனும் ஏற்படாது, மக்களுக்குப் பாதிப்பே அதிகம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

2000 ரூபாய் நோட்டால் கஷ்டம்

2000 ரூபாய் நோட்டால் கஷ்டம்

இதுகுறித்து சந்திரபாபு கூறுகையில் மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டால் கஷ்டம்தான் ஏற்படும். அதற்கு சில்லரை மாற்றுவதற்கு பெரிய கஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதை ஏன் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை.

200 ரூபாய் நோட்டு ஓகே

200 ரூபாய் நோட்டு ஓகே

அதற்குப் பதில் 200 ரூபாய் நோட்ட அச்சிட்டு வெளியிடலாம். அது மக்களுக்கு சுலபமாகவும், வசதியாகவும் இருக்கும். இதுகுறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

50,100 தட்டுப்பாடு கூடாது

50,100 தட்டுப்பாடு கூடாது

வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு இல்லாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் கடமையாகும். மக்களுக்கு அதிகமாக தேவைப்படுவது இந்த ரூபாய் நோட்டுக்கள்தான்.

சிறப்பு கவுண்டர்கள் தேவை

சிறப்பு கவுண்டர்கள் தேவை

மேலும் வங்கிகளில் பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்காக தனி கவுண்டர்கள் திறக்கப்பட வேண்டும். மக்கள் கடும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருவது பாராட்டுக்குரியது.

ரூபாய் நோட்டு ஒழிப்பில் தவறில்லை

ரூபாய் நோட்டு ஒழிப்பில் தவறில்லை

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பில் எந்தத் தவறும் இல்லை. அதேசமயம், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை விரைந்து போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறினார் சந்திரபாபு நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+