விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்.. செக் பண்ணி பாருங்க.. இஸ்ரோ சிவன் அதிரடி பேட்டி!
விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது, இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது, இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.
நேற்று நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் LROC விண்கல ஆய்வு கருவியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது.

யார்
சந்திராயன் 2ன் ஆர்பிட்டர் சரியாக வேலை செய்து வரும் நிலையில் அதன் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மெயில் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் உலகம் முழுக்க சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் வைரலாகி உள்ளார்.

பேட்டி என்ன
இந்த நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே சிவன் ஒடிசாவில் அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது, இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம். இணைய பக்கத்தில் அந்த தகவல் இப்போதும் தேதியுடன் இருக்கிறது. சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம்.

வெளியிட்டோம்
செப்டம்பர் 10ம் தேதி இது தொடர்பாக நாங்கள் தகவலை வெளியிட்டோம் . ஆனால் அப்போது அந்த லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இப்போது நாசா வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

ஆய்வு செய்யவில்லை
விக்ரம் லேண்டர் குறித்து சண்முக சுப்ரமணியம் அளித்த புகைப்படங்களை நாங்கள் ஆய்வு செய்யவில்லை. ஏற்கனவே லேண்டரை கண்டுபிடித்துவிட்டதால், நாங்கள் அந்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications