மத்திய அரசின் செயல்பாட்டை அரசியல் சூழல் மாற்றியுள்ளது: பாஜக கருத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் சூழல் மாறியதாலேயே மத்திய அரசின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாரதீய ஜனதாக் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி, மத்திய அரசின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், ‘அரசியல் சூழல் மாறியதால் மத்திய அரசின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. லோக்பால் மசோதா நிறைவேறினால், நீதித் துறையின் செயல்பாடும் மாறும். ஊழலை ஒழிக்க கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு லோக்பால் மசோதா' என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications