Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. 7 மாதத்தில் 138 'நக்சல்களை' முடித்த 'தமிழர் சுந்தரராஜ்'

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 7 மாதங்களில் மொத்தம் 136 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்னமும் மலைக் காடுகளில் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மலைகளில் பழங்குடி மக்களை கேடயமாக பயன்படுத்தி பதுங்கி வாழ்கின்றனர் மாவோயிஸ்டுகள்.

Chhattisgarh maoists

மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்க பல்வேறு பாதுகாப்புப் படைகள் களமிறங்கி வேட்டையாடி வருகின்றன. சத்தீஸ்கர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி பஸ்தர். இந்த மண்டலத்தின் ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம். மிக நீண்ட காலம் பஸ்தாரில் பணியாற்றியதால் மாவோயிஸ்டுகளை மிக எளிதாக வேட்டையாடி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மே மாதம் 10-ந் தேதி 12 மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். ஜூன் மாதம் 7-ந் தேதி 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஜூன் 15-ந் தேதி 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பஸ்தார் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சகோதரரை கடத்திச் சென்று படுகொலை செய்தனர் மாவோயிஸ்டுகள். போலீஸ் உளவாளியாக செயல்பட்டவர் என சந்தேகித்து மாவோயிஸ்டுகள் இந்த படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து நாராயண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை மீண்டும் முடுக்கிவிடப்பட்டது. அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் பஸ்தார் ஐஜி சுந்தரராஜ் பட்டிலிங்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 மாதங்களில் மொத்தம் 138 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 136 பேர் பஸ்தார் மண்டலத்தில் அழிக்கப்பட்டனர்.

யார் இந்த சுந்தரராஜ்?: பஸ்தாரில் 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். துணை காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சுந்தரராஜ் தற்போது பஸ்தார் மண்டல் ஐஜியாக பொறுப்பு வகிக்கிறார். மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை எப்படி ஒருங்கிணைத்தால் எப்படி வெல்ல முடியும் என்ற வியூகம் அறிந்தவர். 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மாவோயிஸ்டுகள் பஸ்தாரில் கோரத்தாண்டவம் ஆடியிருந்தனர். அப்போதும் மாவோயிஸ்டுகளை எதிர்கொண்டவர் தற்போதைய பஸ்தார் மண்டல ஐஜி சுந்தரராஜ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+