சட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுடன் பாஜக கை கோர்த்துள்ளது என்று சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கூறியுள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டிக்கு அளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலம் தான்டேவடா பகுதியில் நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஷியாமா கிரி மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பீமா மாண்டவியின் வாகனத்தை மாவோயிஸ்டுகள் வெடிகுண்டை வெடிக்க செய்தும் துப்பாக்கியால் சுட்டும் பீமா மாண்டவி உட்பட 5 பேரை கொன்றனர். மக்களவைக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவிருந்த நிலையில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பாஜக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த பூபேஷ் பாகல் சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் பாஜக கைகோர்த்துள்ளது. இதற்கு மிகப்பெரிய ஆதாரமாக 2013-ல் காங்கிரஸ் தலைவர் ஜிராம் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்டதைக் கூறியவர், 2003-ல் 4 பகுதிகளில் மட்டுமே நக்சலிசம் இருந்தது. இப்போது 14 மாவட்டங்களில் பரவியுள்ளது.
முன்னாள் முதல்வர் ரமன்சிங் பிறந்த மாவட்டமான கவர்தாவுக்கும் நக்சலிசம் பரவியுள்ளது என்று கூறியுள்ளார். பயங்கரவாதமும், நக்சலிசமும் பாஜக ஆட்சியில்தான் அதிகரித்தது என்பது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டவை உரி, பதான்கோட், மற்றும் புல்வாமா ஆகிய தாக்குதல்கள் அனைத்தும் பாஜக ஆட்சியில்தான் நடந்துள்ளது.
துப்பாக்கிகள் மூலமாக மட்டுமே நக்சல்களை ஒழிக்க முடியாது கடந்த 3 மாதங்களில் நமது படைகள் 17 மாவோயிஸ்ட்களை கொன்றுள்ளனர். இருப்பினும் நக்சலிசத்தை அழிக்க அதிகப்படியான முயற்சி தேவை. துப்பாக்கி மட்டுமே இதற்கு தீர்வாகாது. அவர்களும் சுடுவார்கள், நம் தரப்பிலிருந்தும் சுடுவோம். இந்த அணுகுமுறை உதவாது. இதனை முடிவுக்குக் கொண்டு வர மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் மாவோயிஸ்ட்களை ஒழிக்க முடியும். இவ்வாறு பூபேஷ் பாகல் கூறியுள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications