மிஸ்டர் நாயர்.. என்ஆர்சி வந்தா.. சட்டிஸ்கரில் பாதிப் பேர் அகதிகளாய்ருவாங்க போலயே!
ராய்ப்பூர்: மிஸ்டர் நாயர்.. ஒரு ஊரே இங்கே மாயமாகியிருக்கு.. இது சிட்டிசன் படத்தில் நக்மா பேசும் வசனம்.. சட்டிஸ்கர் முதல்வர் சொல்லியுள்ள ஒரு தகவலைப் பார்த்தால் பாதி மாநிலமே அகதிகளாகும் அபாயம் இருக்கும் போல.
ஆம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை சட்டிஸ்கர் மாநிலத்தில் அமல்படுத்தினால், மாநிலத்தில் உள்ள பாதிப் பேரிடம் உரிய ஆவணங்கள் இருக்காது என்று சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அதிர வைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலம் சட்டிஸ்கர். இங்கு முதல்வராக இருக்கும் பாகல், தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டமும் தேவையில்லாத ஒன்று என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...
சட்டிஸ்கர் மாநிலத்தில் 2.80 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேரிடம் உரிய நில ஆவணங்கள் இருக்காது. ஏன் பலரிடம் நிலமே கூட இருக்காது.
இவர்களின் பாட்டன், முப்பாட்டன் எல்லாம் படிப்பறிவில்லாதவர்கள். எந்தவிதமான ஆவணங்களும் இவர்களிடம் இருக்காது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை இங்கு அமல்படுத்தினால் பாதிப் பேர் அகதிகளாக வேண்டியதுதான்.
இந்த மக்களில் பலர் பல மாநிலங்களில் வசித்தவர்கள். 50, 100 வருடத்திற்கு முந்தைய ஆவணங்களைக் கேட்டால் எங்கு போய் அவர்கள் அதைப் பெற முடியும். எப்படிப் பெற முடியும்.
இந்தத் திட்டமும், சட்டமும் தேவையில்லாத ஒன்று, மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள தேவையில்லாத சுமை. நாட்டின் குடிமக்களைக் கண்டறிய வேறு பல நல்ல வழிகள் உள்ளன. அதை சரிவர அமல்படுத்தினாலே போதும். ஆனால் அதை விட்டு விட்டு சாமானிய மக்களை தொந்தரவு செய்வது சரியான செயலன்று என்று கூறியுள்ளார் பாகல்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications