தீபாவளி ஸ்பெஷல்.. பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த ‘மேஜிக் விளக்கு’.. குவியும் ஆர்டர்கள்!
சத்தீஸ்கரைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி வடிவமைத்துள்ள மேஜிக் விளக்கிற்கு வரவேற்பு குவிந்துள்ளது.
ராய்பூர்: தீபாவளி பண்டிகையையொட்டி சத்தீஸ்கரைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி வடிவமைத்துள்ள மேஜிக் விளக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சந்தையில் புதுப்புது பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பானை செய்யும் தொழிலாளி ஒருவர் மண் விளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள கொண்டகோன் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சக்ரதாரி. பானை செய்யும் தொழிலாளியான இவர், தீபாவளி பண்டிகையையொட்டி 24 மணி நேரம் எரியக் கூடிய மண் விளக்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.

மேஜிக் விளக்கு
ஆன்லைனில் பல வீடியோக்களை பார்த்து, தனது திறமைகளை பயன்படுத்தி இந்த விளக்கை அவர் வடிவமைத்துள்ளார். இந்த விளக்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது தொடர்ந்து 24 மணி நேரம் எரியக் கூடியது. எனவே இதனை மேஜிக் விளக்கு என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சந்தையில் அறிமுகம்
மேஜிக் விளக்கின் மேற்பகுதியில் எண்ணெய் ஊற்றி வைக்க தனியாக ஒரு கூடு உள்ளது. அதில் இருந்து மெல்லி டியூப் வடிவத்திலான உருளையின் வழியே தீபம் எரியும் பகுதிக்கு எண்ணெய் தானாகவே சென்றுவிடும். இதன் மூலம் இந்த விளக்கு தொடர்ந்து 24 மணி நேரம் வரை எரிய வகை செய்யப்பட்டுள்ளது. இந்த விளக்கை அவர் சமூகவலைதளங்கள் மூலம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

தீபாவளி
தீபாவளி என்றாலே தீப ஒளி என்பது தான் பொருள். எனவே அன்றைய தினம் மக்கள் வீடுகளை விளக்குகளால் அலங்காரப் படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள். அகல் விளக்கு ஏற்றினால் விரைவில் எண்ணெய் தீர்ந்து விடும் என்பதாலேயே மின்சார விளக்குக்கு பலர் மாறி வருகின்றனர்.
Recommended Video

மகிழ்ச்சி
இந்த சூழ்நிலையில் அகல் விளக்கே 24 மணி நேரம் தொடர்ந்து எரியக்கூடிய வகையில் உள்ளதென்பதால், இந்த மேஜிக் விளக்கிற்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. பாரம்பரியமான முறையில் அதே சமயம் பார்ப்பதற்கும் அழகாக இருப்பதால் இந்த விளக்கை மக்கள் விரும்பி வாங்குவதாக கூறி, அசோக் சக்ரதாரி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications