பொறுப்பா பேசுங்க... காஷ்மீருக்கு சுயாட்சி கொடுக்க சொன்ன ப.சி.க்கு காங். குட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு அதிக சுயாட்சி கொடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 2 வாரங்களாக ராணுவத்துக்கு எதிராக வன்முறை வெடித்துள்ளது. இதில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

Chidambaram's views on Kashmir are his personal: Cong

அம்மாநிலத்தில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். எந்த பேரத்தின் கீழ், காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ, அந்த வாக்குறுதியை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். காஷ்மீருக்கு அதிகபட்ச சுயாட்சி அளிப்பதன் மூலம் அந்த பேரத்தை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாடு அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் கூறுகையில், ப.சிதம்பரம் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அது ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம். எனவே, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பொறுப்பான கருத்துதான் வர வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+