உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு நடுவே முரண்பாடு.. தலைமை நீதிபதி தலைமையில் பெஞ்ச்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கியுள்ளார்.
இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் பெஞ்ச்சில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய இந்த அமர்வு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நில கையகப்படுத்துதலுக்கு நிவாரண நிதி ஒதுக்குவது தொடர்பாக 2014ம் ஆண்டு தலைமை நீதிபதி லோதா தலைமையில், நீதிபதிகள் மதன் பி.லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, பிப்ரவரி 8ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் மற்றும் சாந்தனகவுடர் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இதுகுறித்து குரியன் ஜோசப், 'ஓபன் கோர்ட்டில்' தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மாறுபட்ட தீர்ப்பு, நீதித்துறை ஒழுங்கிற்கு எதிரானது என்பது அவரது கருத்து.
3 நீதிபதிகள் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை மற்றொரு 3 நீதிபதிகள் பெஞ்ச் மாற்றம் செய்திருக்க கூடாது என்றும், பதிலாக, 5 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு அதை மாற்றியிருக்க வேண்டும் என்றும் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
குரியன் ஜோசப் கருத்தையடுத்து மறுநாளே, நில கையகப்படுத்துதல் வழக்குகளை தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தலைமை நீதிபதியே இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் மிஸ்ரா பெஞ்ச் கோரிக்கைவிடுத்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications