உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு நடுவே முரண்பாடு.. தலைமை நீதிபதி தலைமையில் பெஞ்ச்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கியுள்ளார்.
இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் பெஞ்ச்சில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய இந்த அமர்வு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நில கையகப்படுத்துதலுக்கு நிவாரண நிதி ஒதுக்குவது தொடர்பாக 2014ம் ஆண்டு தலைமை நீதிபதி லோதா தலைமையில், நீதிபதிகள் மதன் பி.லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, பிப்ரவரி 8ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் மற்றும் சாந்தனகவுடர் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இதுகுறித்து குரியன் ஜோசப், 'ஓபன் கோர்ட்டில்' தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மாறுபட்ட தீர்ப்பு, நீதித்துறை ஒழுங்கிற்கு எதிரானது என்பது அவரது கருத்து.
3 நீதிபதிகள் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை மற்றொரு 3 நீதிபதிகள் பெஞ்ச் மாற்றம் செய்திருக்க கூடாது என்றும், பதிலாக, 5 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு அதை மாற்றியிருக்க வேண்டும் என்றும் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
குரியன் ஜோசப் கருத்தையடுத்து மறுநாளே, நில கையகப்படுத்துதல் வழக்குகளை தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தலைமை நீதிபதியே இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் மிஸ்ரா பெஞ்ச் கோரிக்கைவிடுத்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications