குழந்தைகளையும் விட்டு வைக்காத ஆதார்... சத்துணவு சாப்பிடுவதற்கும் ஆதார் கட்டாயம்
ஆதார் அட்டை இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே அங்கன்வாடியில் சத்துணவு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.
பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்திலும் ஆதார் கார்டை கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குழந்தைகளையும் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் வீரேந்திர குமார், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஏழை எளிய மக்கள் மற்றும் சாமானியர்களின் குழந்தைகள் படித்து வரும் அங்கன்வாடிகளில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படும் என்ற திட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது. அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது. விரைவில் இதுதொடர்பான புதிய ஆணை வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆதார் அட்டை வழங்கப்படும் வரை பிற அடையாள அட்டைகளை காட்டி குழந்தைகள் சத்துணவு மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். சத்துணவில் நடைபெறும் முறைகேடுகளையும், போலி பதிவுகளையும் கண்டறியவே இந்த நடவடிக்கை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications