நமக்கு குறி வைத்து பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை குவித்த சீனா: முலாயம் திடுக் தகவல்
நம்மை குறி வைத்து பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை சீனா குவித்துள்ளது என்கிறார் முலாயம்சிங்.
டெல்லி: பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை சீனா குவித்து வைத்துள்ளதாக லோக்சபாவில் முலாயம்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
லோக்சபாவில் சீனாவுடனான எல்லை பதற்றம் குறித்து கேள்வி எழுப்பி முலாயம்சிங் பேசியதாவது:

எச்சரிக்கை
சீனாவிடம் இருந்து நாம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசை பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர்.

சீனாவும் பாகிஸ்தான்
பாகிஸ்தானுடன் சீனா கைகோர்த்துக் கொண்டுள்ளது. நாட்டின் மீது தாக்குதல் நடத்த முழு அளவில் தயாராகிவிட்டது சீனா. நாட்டின் மிகப் பெரிய எதிரியே சீனாதான்...

காஷ்மீரில்..
நமது அரசு என்னதான் செய்து கொண்டிருக்கிறது? காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சீனா படை கை கோர்த்துள்ளது.

பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள்
நாட்டை இலக்கு வைத்து அணு ஆயுதங்களை பாகிஸ்தானில் குவித்து வைத்துள்ளது சீனா. திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக நாம் அங்கீகரிக்கக் கூடாது. திபெத்தின் விடுதலையை ஆதரிக்கும் நேரம் இது.
இவ்வாறு முலாயம்சிங் யாதவ் பேசினார்.












Click it and Unblock the Notifications