கல்வான் தாக்குதலில் எங்களின் 4 அதிகாரிகள், வீரர்கள் உயிரிழப்பு... ஒருவழியாக ஒப்புக் கொண்ட சீனா!
பீஜிங்: கல்வான் தாக்குதலில் 4 சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
அந்த 4 அதிகாரிகளுக்கும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு விருது அறிவித்துள்ளதாகவும் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான 'பீப்புள்ஸ் டெய்லி'யில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனாவின் அடாவடி
இந்தியாவின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வழக்கமாக வாலாட்டி வரும் நிலையில் சீனாவும் இந்திய எல்லைக்குள் மூக்கை நுழைக்க தொடங்கியது. லடாக்கில் உள்ள இந்திய-சீனா எல்லையில் சீனா தனது படைகளை குவிக்க தொடங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சீனா எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம்
இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது சீன ராணுவ வீரர்கள் கொடூரமாக கற்களை கொண்டு இந்திய வீரர்களை தாக்கினார்கள். இந்திய வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் நமது வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

45 பேர் உயிரிழப்பு
இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்திய தங்கள் வீரர்கள் 20 பேர் பலியானதை அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொண்டது. ஆனால் சீனா தங்கள் தரப்பு வீரர்கள் உயிரிழைப்பை தொடர்ந்து மறுத்து வந்தது. கல்வான் சம்பவத்தில் சீன ராணுவத்தினர் 45 பேரும் பலியானதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் சமீபத்தில் கூறி இருந்தது.

முதன்முறையாக ஒப்புக் கொண்ட சீனா
இந்த நிலையில் கல்வான் தாக்குதலில் 4 சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான 'பீப்புள்ஸ் டெய்லி'யில் இது தொடர்பாக கூறுகையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்களின் அத்துமீறலை தடுக்க முயன்ற 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அந்த 4 அதிகாரிகளுக்கும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு விருது அறிவித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications