அக்சய் சீனில் சீனா செய்த வேலை... இந்திய ராணுவத்துக்கு நெருக்கடி .. ஷாக் தகவல்
லடாக் :சீன மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) கடந்த ஒன்பது மாதங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதிகளில் உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அங்கு புதிதாக ஹெலிபேட் தளத்தை அமைத்துள்ளது . இதனால் இந்தியாவும் அங்கு இதேபோன்ற உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
திபெத் மற்றும் கிழக்கு துர்கெஸ்தானிலும் சின்ஜியாங்), குறிப்பாக இந்திய எல்லைகளிலும் ராணுவத்திற்கான வசதிகளை உயர்த்தி வந்துள்ளது என்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சீன ராணுவ வீரர்கள் ஆக்கிரமிப்பதை தட்டிக்கேட்ட இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜுன் மாதத்திற்கு பிறகு கிழக்கு லடாக்கில் சீனா தனது இராணுவத்திற்கு தேவையான வசதிகளை அதிகரித்து வருகிறது. இவை செயற்கைகோள் படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றன-

ஏவுகணைகளுடன் சீனா
இதற்கு முன்னர் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை ஏவுகணைகளுடன் காத்திருந்தது சீனா. உண்மையில், செயற்கைக்கோள் படங்களால் சுட்டிக்காட்டப்பட்டபடி, ஆகஸ்ட் 2019 ஆரம்பத்தில் சீனா கிழக்கு லடாக்கில் நுழைவதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் சமாதானங்களால் நுழையவில்லை.‘

ஹெலிபேட் தளம்
இதனிடையே இந்தியா டுடே ஓஎஸ்ஐஎன்டி குழு இப்போது வாஷிங்டனை தளமாகக் கொண்ட செயற்கைக்கோள் பட ஆய்வாளர் கிறிஸ் பிகெர்ஸிடமிருந்து பெறப்பட்ட உயர்-தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தது. அதில் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிபேட் அமைத்துள்ளதை கண்டுபிடித்துள்ளது.

லே சாலை அருகே
ஹெலிபோர்ட் கட்டுமானம் இந்தியாவின் தௌலத் பேக் ஓல்டி (டிபிஓ) விமானநிலையத்திற்கு எதிரே உள்ளது, மேலும் 16,700 அடி உயரத்தில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஐசி) மற்றும் 255 கிமீ டார்புக்-ஷியோக்-டிபிஓ சாலைக்கு மிக அருகில் உள்ளது.

கட்டமைப்பு உருவாக்கம்
மே மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமாக சீன சொல்லி வரும் லேவை டிபிஓவுடன் சாலையை இந்த ஹெலிபேட் தளம் இணைக்கிறது, இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் அருகே ஹெலிபேட் தளம் அமைத்துள்ளது சீனா. இந்த ஹெலிபேட் தளம் காரணமாக இந்தியாவும் எல்லைப்பகுதியில் வசதிகளை மேம்படுத்த வேண்டிய நிலைக்கு சீனா தூண்டியுள்ளது.

அக்சாய் சீனில்
அக்சய் சினின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய சமீபத்திய செயற்கைக்கோள் படங்களின் படி பார்த்தால், சீன மக்கள் விடுதலை ராணுவம், ஆக்கிரமித்துள்ள பகுதிக்குள் ஒரு ஹெலிபோர்ட்டை உருவாக்கி வருவதை காட்டுகிறது. ஹெலிபோர்ட் பகுதி 2019 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2019 அக்டோபரில் செயல்பட தொடங்கியது தெரிகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications