குவிக்கப்பட்ட 10 ஜாகுவார் போர் விமானங்கள்.. அந்தமானில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு.. என்ன நடக்கிறது?
அந்தமான்: அந்தமான் நிகோபார் பகுதியில் தற்போது இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களாக இந்திய பாதுகாப்பு படை அந்தமான் நிக்கோபார் பகுதியில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. அங்கு இந்திய கடற்படை தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. நேற்று முதல்நாள் அங்கு இந்தியா சார்பாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் போர் கப்பல்கள் 4க்கும் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டது. அதோடு இந்த போர் கப்பல்கள் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன
இந்த நிலையில் தற்போது அந்தமான் நிக்கோபார் பகுதியில் இந்திய விமானப்படை சார்பாக 10 ஜாக்குவர் போர் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. SEPECAT எனப்படும் பிரான்சில் இருந்து வாங்கப்பட்ட போர் விமானங்களை இந்தியா அங்கே குவித்து வருகிறது. வான்வெளி சண்டைக்கு ஏற்ற இந்த விமானங்கள் அங்கே குவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விமானங்கள் அங்கு தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏவுகணைகள் எப்படி
அதேபோல் இங்கே இந்தியா ஏவுகணைகளை இறக்கி உள்ளது. இந்தியாவின் ஹர்பூன் வகை ஏவுகணைகள் அங்கே களமிறக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகும். போர் கப்பல்களை தாக்குதவற்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது ஆகும் இது. இந்தியா அந்தமான் கடல் பகுதியில் தற்போது இதை களமிறக்கி உள்ளது.

அமெரிக்கா எப்படி
அந்தமான் எல்லையில் இந்தியாவுடன் அமெரிக்காவும் சேர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று இன்றுதான் தகவல் வெளியானது. இதற்காக அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஏற்கனவே இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் நிமிட்ஸ் போர் கப்பல் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபடும் என்கிறார்கள். இது உலகிலேயே பெரிய அணு ஆயுத கப்பல் ஆகும்.

ஏன் இப்படி
அந்தமானில் திடீரென இரண்டு நாட்களாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான காரணம் சொல்லப்படவில்லை. ஆனால் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறலை தடுக்கும் வகையில் இப்படி பாதுகாப்பு அதிகரிக்கப்படுத்துவதாக கூறுகிறார்கள். அங்கே சீனா எதுவும் செய்து விட கூடாது என்று முன்னெச்சரிக்கையாக இப்படி செயல்படுவதாக கூறுகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications