இந்திய எல்லைக்குள் 25 கிலோமீட்டர் ஊடுறுவி கொடி பிடித்தபடி டேரா போட்ட சீன ராணுவம்..!
டெல்லி: சீன ராணுவத்தினர், வடக்கு லடாக் பிராந்தியத்தில் பர்ட்ஸே பகுதியில் 25 முதல் 30 கிலோமீ்ட்டர் தூரம் வரை ஊடுறுவி வந்துள்ளனர். இது இந்தியப் பகுதி திரும்பிப் போ என்ற கொடியுடன் அவர்கள் இந்தியப் பகுதியில், இந்திய ராணுவ முகாம் அருகே முகாமிட்டுள்ளனர். இதே பகுதியில்தான் கடந்த ஆண்டும் சீன ராணுவம் ஊடுறுவி வந்த கொட்டாய் போட முயற்சித்து பெரும் சர்ச்சையானது என்பது நினைவிருக்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை இந்த ஊடுறுவல் நடந்துள்ளது. பர்ட்ஸே பகுதியில் தற்போது இந்திய ராணுவம் புதிய கண்காணிப்புக் கோபுரத்தை அமைத்துள்ளது. அதில் இருந்த ராணுவத்தினர், சீனப் படையினரின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து படையினரை உஷார்படுத்தினர்.
இந்தப் பகுதியானது கடல் மட்டத்திலிருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு எல்லைக் கோட்டுக்கு உள்ளே இந்திய எல்லைக்குள் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை சீனப் படையினர் ஊடுறுவி வந்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படையினர் தங்களது முகாமிலிருந்து வெளியே வந்தனர். ஆனால் சீன ராணுவத்தினர் திரும்பிப் போகவில்லை.
அதேபோல திங்கள்கிழமையும் சீனப்படையினர் அங்கு முகாமிட்டனர். ஆனால் இந்த முறை நடமாட்டம் இல்லாமல் கீழே கொடி பிடித்தபடி உட்கார்ந்திருந்தனர். அந்தக் கொடியில், இது சீனப் பகுதி, திரும்பிப் போ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து இரு தரப்பு ராணுவத்திற்கிடையே பேச்சுக்கள் நடந்தன. இருப்பினும் சீனப் படையினர் திரும்பிச் செல்வதாக இல்லை. இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. இதையடுத்து இந்தியப் படையினர் தங்களது முகாமுக்குத் திரும்பிச் சென்று உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் இப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று உதம்பூர் ராணுவ செய்தித் தொடர்பாளர் கோஸ்வாமி கூறியுள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications