இந்திய எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கு பயிற்சி அளிக்கும் சீனா ராணுவம்- திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினருக்கு சீனா ராணுவத்தினர் பயிற்சிகள் அளித்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரத்தின் ரஜோரி சர்வதேச எல்லைப் பகுதியில் சீனாவின் நடமாட்டம் குறித்து எல்லை பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ படையின் சிறப்புப் பிரிவு சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளது.

Chinese troops training Pak Army along border with India: Report

பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் ஜம்மு காஷ்மீருக்குள் சட்டசபை தேர்தலின் போது ஊடுருவுவதற்காக காத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

ரஜோரி செக்டாரின் சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தினர் பாகிஸ்தான் படையினருக்கு பயிற்சிகள் அளித்தும் வருகின்றனர்.

இந்திய நிலைகளைக் கண்காணிப்பதற்கான புதியதாக 2 கண்காணிப்புக் கோபுரங்களை அபோகர் மற்றும் குருதாஸ்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+